கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.1000 இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

image

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைத்த மத்திய அரசு! 

கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிப்பதை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு  ரூ.1000 ஆயிரம் ரொக்கத்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

image

தமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக எங்கெங்கே எத்தனை ? 

இந்நிலையில் இவற்றின் விநியோகம் இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்கிடையில் இப்பொருட்களை வாங்குவதற்கான டோக்கனை பெற ரேஷன்
கடைகளில் மக்கள் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து டோக்கன் அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.