காஞ்சிபுரத்தில் இந்தோனேசியாவில் இருந்து வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பிரதான சாலைகள் தெருக்கள் அனைத்திலும், போலீசார் இரும்பு தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

 காஞ்சி நகரில், நான்கு ராஜவீதிகள், காமராஜர் சாலை, காந்தி சாலை, பச்சையப்பன் சாலை, உத்திரமேரூர், வந்தவாசி, செங்கல்பட்டு, தாம்பரம் திருவண்ணாமலை செல்லும் முக்கிய நெடுஞ் சாலைகள் , நகருக்குள் இருக்கும் குறுக்கு தெருக்களில் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து உள்ளனர்.

image

காஞ்சிபுரத்தில் உள்ள தேரடி பகுதியில் இந்தோனேசியாவில் இருந்து வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

image

மேலும் பிரதான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை விசாரித்து,தேவையில்லாமல் சுற்றும் வண்டிகளை பறிமுதல் செய்யும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. நோய்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் இருந்த பகுதியில் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த ராஜாஜி மார்க்கெட் பகுதியில் இயங்கி வந்ததால் அந்த மார்க்கெட்டை முழுவதும் காவல்துறை ரத்து செய்துள்ளது. மேலும் காஞ்சிபுரத்திலிருந்து பிரிந்து ஊர் செல்லும் கிராம சாலையில் தற்காலிகமாக அந்த மார்க்கெட் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

கொரோனா பரவ வாய்ப்பு: ‘சுவிங்கம்’க்கு தடை!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.