அவசரத் தேவைக்காக பயணம் மேற்கொள்ள அனுமதிகோரி 5 ஆயிரத்து 300 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காலத்தில் அவசர காரணங்களுக்காக பயணம் செய்ய விரும்புவோர் அனுமதி பெறுவதற்கென தனிக்கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் நிகழும் இறப்பு, திருமணம் அல்லது அவசர மருத்துவ காரணங்களுக்காக முன் அனுமதி பெற்றுச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழக மாவட்டங்கள் இடையிலோ, வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால் 75300 01100 என்ற அவசரகால கட்டுப்பாட்டு அறை ண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

image

“அமெரிக்காவில் 2 வாரங்களில் கொரோனா உயிரிழப்பு உச்சம் தொட வாய்ப்பு”- ட்ரம்ப் அச்சம்

மேலும் குறுஞ்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமும் தெரிவிக்கலாம் என்றும், gcpcorona2020@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தகவல் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயண அனுமதிச் சீட்டு கேட்பவர்கள் கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களையும் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையின் சேவை அவசர தேவைகளுக்காக மட்டுமே என்றும் சாதாரண தேவைகளுக்கு அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவசரத் தேவைக்காக பயணம் மேற்கொள்ள அனுமதிகோரி 5 ஆயிரத்து 300 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. அவற்றில் 25 மட்டுமே அனுமதிக்க தகுதியானவை என மாநகர காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

image

“வருவாய் இன்றி தவிக்கிறோம்.. நேரத்தை அதிகப்படுத்துங்கள்” – ‘டெலிவரி பாய்ஸ்’ வேதனை

விண்ணப்பம் செய்தவர்கள் நேரில் அழைக்கப்பட்டு அவர்கள் செல்லும் ஊரில் உள்ள காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவலை உறுதி செய்த பின்னர் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பயணம் மேற்கொள்ள ஒப்புதல் அளித்த நபர்களுக்கு கொரோனா தொற்று குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.