ஜார்க்கண்ட் மாநிலத்தில், 16 வயது சிறுமியை அவருடைய நண்பர் உட்பட 9 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை பயன்படுத்தி ஜார்க்கண்ட் மாநிலத்தில், 16 வயது சிறுமியை அவருடைய நண்பர் உட்பட 9 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

image

கடந்த 24-ஆம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு செல்ல போக்குவரத்து இல்லாமல் தவித்துள்ளார். அப்போது அவரது நண்பரின் உதவியை நாடியதாக தெரிகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட சிறுமியின் நண்பர், சாலை வழியாக சென்றால் போலீசார் கெடுபிடி இருக்கும் எனக்கூறி காட்டுப்பகுதி வழியாக சென்றுள்ளார்.

image

அந்த காட்டுப்பகுதியில் சிறுமி நண்பரின் சக நண்பர்கள் 8 பேர் இருந்துள்ளனர். சிறுமியை அழைத்து வந்த நபர், சக நண்பர்கள் 8 பேருடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக விலகல் எங்கே?: கூட்டத்தால் வழிந்த விழுப்புரம் மீன் மார்க்கெட்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.