`தமிழ் மொழிக்கு உலக அளவில் அங்கீகாரம்; எம்.ஜி.ஆரின் கனவுகளை முன்னெடுத்துச் செல்வோம்!’ – மோடி பேச்சு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டியில் திட்டமிடப்பட்டிருந்த பா.ஜ.க பொதுக் கூட்டத்துக்கு, பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார். உள்ளூர் பா.ஜ.க-வினரின் உற்சாக வரவேற்போடு, மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றத் தொடங்கினார் மோடி. பிரதமர் மோடி – நெல்லை பாஜக பொதுக்கூட்டம் அப்போது பேசுகையில், `பா.ஜ.க-வுக்கு மக்களிடம் கிடைக்கும் ஆதரவைக் கண்டு இந்தியா கூட்டணியின் தூக்கம் தொலைந்து விட்டது. கடந்த 10 வருடங்களாக பா.ஜ.க அரசு கடுமையாக உழைத்து ஏழை மக்களுக்குப்…