“விளை நிலங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட்டாக மாறும்’ – ஊட்டியை மாநகராட்சியாக அறிவிக்க எதிர்ப்பு
நீலகிரி மலையில் ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் முடிவில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஊட்டி நகராட்சியில் இதற்கென சிறப்பு நகர்மன்ற கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டு, ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊட்டியைச் சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளான கேத்தி, நஞ்சநாடு, உல்லத்தி, தொட்டபெட்டா போன்ற பல கிராமங்களை இணைத்து மாநகராட்சியாக அறிவிக்கும் அரசின் முடிவுக்கு உள்ளூர் மக்கள் கடுமையான எதிர்ப்பைத்…