இலங்கையை தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்!
இலங்கையை தொடர்ந்து இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் வாங்கியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 18 ஆயிரம் கோடியை கடனாக வாங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு. குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி…