“மனைவியிடம் அனுமதி வாங்கிவிட்டு பேச வந்துள்ளேன்!” கூட்டத்தில் உண்மையைப் போட்டு உடைத்த தொழிலதிபர்!
மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களை ஒன்றிணைத்து, அவர்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுவரும் அமைப்புதான் மடீட்சியா (MADITSSIA). இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 50 ஆண்டு பொன் விழா இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், இந்த அமைப்பு ‘மடீட்கான்’ என்கிற பெயரில் மதுரை மற்றும் மதுரையைச் சுற்றி தொழில்முனைவோர்கள் கலந்துகொள்ளும் மாநாடு ஒன்றைக் கடந்த 14-ஆம் அன்று கள்ளந்திரியில் உள்ள எ.கே.என்.கே பேலஸ் அரங்கில் நடத்தியது. முன்னூறுக்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் இந்த…