“அதிமுக ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்; திமுக மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடாது” – வி.கே. சசிகலா

திமுக கூட்டணி, பாஜக – அதிமுக கூட்டணி, தனித்துக் களம் காணும் சீமான், உள்கட்சி பிரச்சினையால் கூட்டணி இழுபறியில் இருக்கும் பாமக, புதிதாக தேர்தல் களம் காணும் விஜய் என 2026 சட்டமன்றத் தேர்தல் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

இதற்கிடையில் அதிமுகவுடன் ஒன்றுபட ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், வி.கே.சசிகலா போராடிக்கொண்டிருக்கின்றனர்.

ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் வி.கே. சசிகலா,

“தமிழக மக்களின் நலன் காக்க, கழக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கரம் கோர்க்க வேண்டும். ஒன்றுபட்ட, வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஒரே தீர்வு.

ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவாக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்.

தமிழக மக்களின் நலன் காக்க, எந்த திமுகவையும் ஆட்சி அதிகாரத்திலிருந்தும், அரசியல் களத்திலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்று புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா பாடுபட்டார்களே, அந்த திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக் கூடிய சூழலை நாம் உருவாக்கக் கூடாது.

சசிகலா
சசிகலா

எனக்கு எந்த சுயநலமும் கிடையாது

அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றே தொண்டர்களும், மக்களும் விரும்புகின்றனர். நாம் ஒன்றுபடுவதுதான் தமிழக மக்களுக்கு செய்யும் நல்லது. அதனால்தான் கழகம் ஒன்றுபட வேண்டும் என்று தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். எனக்கு எந்த சுயநலமும் கிடையாது. மக்கள் நலத்தை மட்டுமே எப்போதும் நான் சிந்திக்கின்றேன்,” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs