“உலக வர்த்தகம் தானாக நடைபெற வேண்டும்; அழுத்தத்தின் கீழல்ல” – RSS தலைவர் மோகன் பகவத்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா மூன்று நாள் கருத்தரங்கு தொடர் சொற்பொழிவுடன் நடைபெற்று வருகிறது.

அதில், இரண்டாம் நாளான நேற்று “100 ஆண்டுகளின் சங்கப் பயணம்: புதிய எல்லைகள்” என்ற தலைப்பில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:
“உள்நாட்டில் தயாரிக்கப்படும் எதையும் வெளியிலிருந்து இறக்குமதி செய்யத் தேவையில்லை. உள்நாட்டில் தயாரிக்கப்படாததுடன், வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை மட்டும் நாம் இறக்குமதி செய்யலாம்.

நாட்டின் கொள்கை தானாகவே வகுக்கப்பட வேண்டும்; ஒருவரின் அழுத்தத்தின் கீழ் செல்லக் கூடாது. சுதேசி என்பது, நாட்டில் ஏற்கனவே உள்ள அல்லது எளிதில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்யாமல் இருப்பதைக் குறிக்கிறது.

மோகன் பகவத்
மோகன் பகவத்

ஆத்மநிர்பர் அல்லது சுதேசி முக்கியம். சர்வதேச வர்த்தகம் தானாகவே நடைபெற வேண்டும்; ஆனால் அழுத்தத்தின் கீழ் நிகழக்கூடாது. சுயசார்புதான் அனைத்து பிரச்னைகளுக்கும் முக்கிய தீர்வாகும்.

எனவே, உள்நாட்டு (சுதேசி) தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம்.

இந்திய மதிப்புகளை ஏற்றுக்கொள்வது, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவது, சுற்றுச்சூழல் உணர்வை ஊக்குவிப்பது உள்ளிட்டவை — சமூக மாற்றத்திற்கான திட்டங்களாக செயல்படுத்தப்பட வேண்டும்,” என அவர் உரையாற்றினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk