“அதிமுக ஆட்சிக்கு வந்தால் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்”-எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி

பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 11-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமைச்சர் சேகர் பாபு தலைமையில் போராட்டக்குழு நடத்திய பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.

சேகர் பாபு
சேகர் பாபு

‘கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ – கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

இந்தச் சூழலில் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு சீமான், கி.விரமணி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக போராட்டக்காரர்களை பனையூர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசிய தவெக விஜய் எந்தவொரு உதவியும், முழு ஆதரவும் தருவதாகக் கூறியிருக்கிறார்.

எஸ்.பி.வேலுமணி

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். அதிமுக ஆட்சியில் 17,000 தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். தூய்மைப்பணியாளர் போராட்ட விவகாரத்தில் அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவில்லை; பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்” என்று உறுதியளத்துப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs