தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப் பிறகு, அப்போலோ மருத்துவமனை, “இன்று காலை வழக்கமாக நடைபயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன,” என மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
தற்போது அவருடைய உடல்நிலை குறித்து மற்றொரு அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், “லேசான மயக்கம் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் இன்று ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.

அவர் மேலும் மூன்று நாட்களுக்கு மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.
அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.