Armstrong: ‘மக்கள் மனதில் அன்பையும் அறிவையும் விதைத்தது நம்ம ஆம்ஸ்ட்ராங்’- நயினார் நாகேந்திரன்

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்

இதில் தமிழக  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், “ இன்று ஆம்ஸ்ட்ராங் நம்மோடு இல்லை. ஆனாலும் ஒவ்வொருவர் மனதிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிற தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருக்கிறார்.

ஆயிரக்கணக்கான பேர் சென்னையில் இன்று வழக்கறிஞராக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் ஆம்ஸ்ட்ராங்தான். அனைத்து சமூகத்தினரையும் நேசிக்கும் ஒரு தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். இப்படிப்பட்ட தலைவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக கலந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் உண்மையிலேயே அவர் செய்த தியாகம், உழைப்பு அவர் மக்களுக்காற்றிய பணிகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

முதன் முதலாக நிலவில் கால்பதித்தது அந்த  ஆம்ஸ்ட்ராங். மக்கள் மனதில் அன்பையும், அறிவையும் விதைத்தது இந்த  ஆம்ஸ்ட்ராங். எல்லாக் கட்சி தலைவர்களும் இன்றைக்கு  ஆம்ஸ்ட்ராங்கை போற்றுகிறோம்” என்று பேசியிருக்கிறார்.             

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY