வி.சி.க பெண் கவுன்சிலர் வெட்டிக்கொலை; காவல்துறையில் சரணடைந்த கணவர்!?

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் கவுன்சிலரை கொலை செய்ததாக அவரது கணவர் காவல்துறையில் சரணடைந்திருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோமதியும், ஸ்டீபன்ராஜும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சமீபமாக இருவருக்குமிடையே தொடர்ந்து வாக்குவாதம் சண்டையாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை
கொலை

இந்நிலையில் நேற்று (ஜூலை 4) இரவு திருநின்றவூர் நடுகுத்தகை பகுதியில் உள்ள ஜெயராம் நகரில் ஸ்டீபன்ராஜ், தனது மனைவியும் கவுன்சிலருமான கோமதியை கத்தியால் வெட்டிக் கொலை செய்திருக்கிறார். இதையடுத்து நேராக காவல்துறையில் சரணடைந்திருக்கும் ஸ்டீபன்ராஜ், தனது மனைவி கோமதிக்கும் தனக்கும் நீண்ட நாள்களாக சண்டை இருந்ததாகவும், கோமதிக்கு திருமணம் தாண்டிய உறவு இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

கோமதி, நேற்றிரவு ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், அதைக் கண்ட ஆத்திரத்தில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மனைவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாகவும் காவல்துறையிடம் கூறியிருக்கிறார். இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs