அகமதாபாத் விமான விபத்து: “காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவி செய்யுங்கள்”- ராகுல் காந்தி வேண்டுகோள்

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானத்தில், விமான குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருக்கிறார்கள்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட இந்த விமானம் விபத்துக்குள்ளாகி, அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது.

Ahmedabad Airplane Crash
Ahmedabad Plane Crash

Ahmedabad Airplane Accident : ‘விமானத்தில் பயணித்த பாஜக முன்னாள் முதல்வர்?’ – நிலை என்ன?

விமானம் அப்பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள், கல்லூரியில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 242 விமான பயணிகள் மற்றும் ஊழியர்கள், பாதிகப்பட்ட அப்பகுதியில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

லண்டனின் காட்விக்கை நோக்கி தனது மகளைப் பார்க்கச் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி (68), இந்த விமான விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

இந்தத் துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் எதிர்க்கட்சித் தலைவர் காங்கிரஸ் ராகுல் காந்தி, “ஆகமதாபாத் ஏர் இந்தியா விபத்து இதயத்தை நொறுக்கியது.

பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் பதற்றம் கற்பனை செய்ய முடியாதது. இந்த கடினமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவர்கள் ஒவ்வொருவருடனும் உள்ளன. அரசு நிர்வாகத்தின் அவசரகால மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.” என தனது எக்ஸ் தளத்தில் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY