RCB Event Stampede : ‘ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!’ – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டிதலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியிருக்கிறார்.

பெங்களூரு
பெங்களூரு

உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்!

“காங்கிரஸ் சார்பாக ஆழந்த இரங்கலையும், வருத்ததையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற எத்தனையோ விபத்துக்கள், சம்பவங்கள் நடக்கின்றன.

ஒவ்வொரு முறையும் அதற்கான தற்காப்பைத் தவறுகிறோம் என்று தான் நான் எண்ணுகிறேன். இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

பொது இடங்களில் ஆய்வு செய்தப்பிறகு மக்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். சில நேரங்களில் மக்கள் கட்டுப்பாட்டை மீறி வருகிறார்கள். 

ரசிகர்கள்

ரசிகர்களுக்கு வேகம் தேவைதான். அதேபோல் விவேகமும் தேவைதான். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க எல்லா மாநிலங்களும்  ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்”  என்று  தெரிவித்திருக்கிறார் .

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY