ஏற்றத்தில் தங்கம் விலை; தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கி – இரண்டுக்கும் காரணம் என்ன?

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

கடந்த சில நாள்களாக பம்மி வந்த தங்கம் விலை, இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த 2-ம் தேதி தங்கம் விலை, ஒரே நாளில் இரண்டு முறை மாற்றத்தை சந்தித்தது. அந்த நாள் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், பவுனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்தது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு 160-ம் உயர்ந்தது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்துள்ளது.

இந்தத் திடீர் தங்கம் விலை உயர்வுக்கு சர்வதேச அளவில் தங்கம் விலை கொஞ்சம் ஏற்றம் கண்டுள்ளது முக்கிய காரணம் மற்றும் டாலரின் மதிப்பு இறக்கத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

இன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,090 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.72,720 ஆகும்.

வெள்ளி | ஆபரணம்
வெள்ளி | ஆபரணம்

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.114 ஆகும்.

ரிசர்வ் வங்கி!

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து தங்கம் வாங்கி குவித்து வருகிறது. காரணம், இன்றைய உலக பொருளாதார சூழலில் தங்கம் மிக நம்பத்தகுந்த முதலீடாக இருப்பது தான்.

தற்போது இந்திய ரிசர்வ் வங்கி தங்கம் வைத்திருக்கும் அளவு…

2024-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் 822 டன் தங்கம் இருந்தது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.2,74,714 கோடி.

இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கம் இருப்பு 879 டன்னாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.4,31,624 கோடி.

ஆக, இரண்டு ஆண்டுகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கம் கையிருப்பின் மதிப்பு 57 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால், தங்கம் வாங்கியது என்னவோ எக்ஸ்ட்ரா 57 டன் மட்டுமே.