CIEL HR Services Private Limited என்பது ஒரு முன்னணி தனியார் மனிதவள மேம்பாட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் நிரந்தர பணியாளர் நியமனம், நெகிழ்வான பணியாளர் நியமனம், திறமை மதிப்பீடு, மனிதவள ஆலோசனை மற்றும் மனிதவள மேலாண்மை போன்ற சேவைகளை வழங்கி வருகிறது.
CIEL நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் 50 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் மூத்த நிபுணரான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அது குறித்து சென்னையில் உள்ள தாஜ் கொரோமண்டல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாஃபா பாண்டியராஜன் பேசியதாவது,
“எங்களது நிறுவனம் எப்போதும் போல் அல்லாமல், தனிப்பாதையில் செயல்பட்டு வருகிறது. எங்களது நோக்கமே வலுவான அடித்தளமும் தரமான சேவைகளுமாகும். இதற்கு முக்கிய காரணம், ‘எங்களது வாடிக்கையாளர்கள்’.
கடந்த மூன்று ஆண்டுகளில் எங்களது வாடிக்கையாளர்கள் பல வெற்றிகளை அடைந்துள்ளனர். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றே உதவுகிறோம். இதனால், மனிதவள சேவைகளில் வணிகப் பிரிவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 37.71% வளர்ச்சியடைந்துள்ளது. அதேபோல், மனிதவள தளங்களின் வருவாய் 61.69% உயர்ந்துள்ளது.
எங்களது 50 சதவிகித வளர்ச்சிக்கு எங்களது இன்ஆர்கானிக் டெக்னிக் முக்கிய காரணம். இந்த ஆண்டு மொத்தம் 1400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளோம். இதில், நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 60 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம்.
மனிதவள மேம்பாட்டுத் துறையில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். சமூக நோக்கமும் DeepTech துறையில் முதலீடு செய்து, 20 உள்துறைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறோம். இதனால், கடந்த பத்து ஆண்டுகளில் 50% வளர்ச்சியை அடைந்துள்ளோம்.

FMCG (Fast Moving Consumer Goods), மார்க்கெட்டிங், Quick Commerce ஆகியவை எங்கள் முக்கிய உத்திகளாகும். தற்போது அனைத்து ஆவணங்களும் தயாராகிவிட்டன, விரைவில் மேலும் புதுப்பிப்புகளை வழங்குவோம். DeepTech நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறோம்.
இது ஒரு சிறந்த காலக்கட்டமாகும். இன்ஜினீயரிங், உற்பத்தி, ஐ.டி. சர்வீஸ், மார்க்கெட்டிங் ஆகிய துறைகளில் வித்தியாசமான தளங்களில் வேலை செய்கிறோம். தற்போது செபி ஒப்புதல் கிடைத்த உடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம்.
தற்போது 328 கோடி ரூபாய் மதிப்பிலான 15 வெர்ட்டிகல் பிரிவுகளைப் பிரித்து, 4 வேளாண்மை உள்ளீடு துறைகள், 15 வங்கித்துறை மற்றும் நிதிச் சேவை சந்தைகளில் செயல்பட்டு வருகிறோம்.

பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு வேலை செய்து வருகிறோம். பல நாடுகளில் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். குஜராத்தில் மட்டும் 6 அலுவலகங்களில் செமிகண்டக்டர் துறையில் செயல்படுகிறோம். எங்களிடம் 3000 இளைஞர்கள் புதிதாக பதிவு செய்துள்ளனர்.
டிஜிட்டல் மூலம் இளைஞர்களை ஈர்ப்பது எங்களின் மிகப்பெரிய பலம். மாதம் 4,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பை வழங்குகிறோம். தமிழ்நாட்டில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை பல மாவட்டங்களில் நாங்களே செயல்படுத்தி வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில், கேம்பஸ் இன்டர்வியூக்களை அதிகப்படுத்தியுள்ளோம். தற்போது எங்களிடம் 7,000 அப்ரண்டீஸ்கள் வேலை செய்து வருகின்றனர்.” என்றார்.