தலைக்கேறிய மதுபோதை… தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்! – திருச்சி அதிர்ச்சி

திருச்சி, திருவானைக்காவல் அழகிரிபுறம் அருகே உள்ள ஏ.யூ.டி நகரில் வசித்து வந்தவர் சோமசுந்தரம் (வயது: 45). இவர், சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் மோகன்ராஜ் ( வயது: 19 ). இவர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில், குடிபோதையில் சோமசுந்தரம் வீட்டில் இருந்தவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த வகையில், வழக்கம்போல தலைக்கேறிய மதுபோதையுடன் வந்த மோகன்ராஜ், வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதை மோகன்ராஜ் தட்டிக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.

trichy

இதனால் ஆத்திரம் அடைந்த மகன் மோகன்ராஜ் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து சோமசுந்தரத்தை தலையில் அடித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கிய சோமசுந்தரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். தலைக்கேறிய மதுபோதையில் தந்தையையே மகன் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.