‘இந்தி எதிர்ப்பு’ குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில்…
“பிற மாநிலங்களில் இருக்கும் என்னுடைய அன்பான சகோதரி, சகோதரர்களே,
நீங்கள் எப்போதாவது இந்தி எத்தனை மொழிகளை விழுங்கியிருக்கிறது என்பதை யோசித்திருக்கிறீர்களா?
போஜ்புரி, மைதிலி, அவதி, ப்ராஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மாகஹி, மார்வாரி, மால்வி, சத்தீஸ்கர்ஹி, சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, குர்மலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் நிறைய மொழிகள் வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கின்றன.
My dear sisters and brothers from other states,
Ever wondered how many Indian languages Hindi has swallowed? Bhojpuri, Maithili, Awadhi, Braj, Bundeli, Garhwali, Kumaoni, Magahi, Marwari, Malvi, Chhattisgarhi, Santhali, Angika, Ho, Kharia, Khortha, Kurmali, Kurukh, Mundari and… pic.twitter.com/VhkWtCDHV9
— M.K.Stalin (@mkstalin) February 27, 2025
இந்தி என்ற ஒற்றை மொழிக்கான உந்துதல் பண்டைய கால தாய் மொழிகளைக் கொன்றுள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ‘இந்தியின் இதய நிலங்கள்’ மட்டுமல்ல. அதன் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்களாக உள்ளன.
தமிழ்நாடு இதை எதிர்க்கும். இதனால் என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன!” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் எழுதியிருக்கும் மடல்…



