திருப்பரங்குன்றம்: ‘திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது…’- சேகர் பாபு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“வட மாநிலங்களைப் போல் இங்கும் கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் இங்கு இருக்கின்ற முதல்வர் உறுதிமிக்க முதல்வர், இரும்பு மனிதர். எங்கு கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார். ஆகவே இந்த பெரியார் மண்ணில், திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒரு காலமும் அனுமதிக்க மாட்டார்.

திருப்பரங்குன்றம்

அரசியல் குளிர்காயலாம் என்று இந்தப் பிரச்னையை கையில் எடுப்பவர்களுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் இந்த அரசு. நீதிமன்றம் என்ன வழிகாட்டுகிறதோ அதன்படிதான் இந்த அரசு செயல்படும். கூடிய விரைவில் துறையின் அமைச்சர் என்ற வகையில் அந்த மலைக்கு சென்று விசாரிக்க உள்ளேன்.

இந்துக்களும், முஸ்லிம்களும் மாமன், மச்சான் போன்று பழகி வருகின்றனர். அதனை கெடுக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் உறவினர்களைப்போல் வாழ்ந்து வருகின்றனர்.

அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக இது போன்ற நாடகம் நடத்துகிறது. நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என்று சொல்ல வேண்டாம். அவர்கள் பாஜக,-வை சேர்ந்தவர்கள்தான் ” என்று சேகர் பாபு பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs