Rain Alert : `மீண்டும் இரவு முதல் காலை வரை மழை..!’ – வெதர்மேன் பிரதீப்ஜான் கொடுத்த அப்டேட் என்ன?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது.

சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்து இருக்கிறது. குறிப்பாக தென் சென்னையில் சற்று கூடுதலாகவே மழை பதிவாகி இருக்கிறது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

அடுத்த 2 மணி நேரத்தில் (பகல் 12 மணி வரை) ஒரு சில இடங்களில் சீரான மழையும், சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும். ECR, OMR பகுதிகளில் மழை நின்ற பிறகு வட சென்னையில் மழை பொழிவு குறையும். மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும். பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம் என்று பிரதீப்ஜான் பதிவிட்டிருக்கிறார்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb