வரதட்சனை வழக்கு: பாஜக-வின் ஏ.பி.முருகானந்தத்துக்கு பிடி வாரன்ட்.. கோவை நீதிமன்றம் அதிரடி!

கோவை மாவட்டம், சாவடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரசாமி . இவரது மகள் ஞான சௌந்தரிக்கும், பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ள ஏ.பி. முருகானந்தத்துக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ஏ.பி.முருகானந்தம்

இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு ஞான சௌந்தரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுந்தரசாமி தரப்பில், முருகானந்தத்துக்கு ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம், 60 சவரன் தங்க நகை, ரூ.10 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்களை ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்திருக்கிறார்.

சுந்தரசாமி

மகள் இறந்ததால் அந்த வரதட்சணை பொருள்களை ஒப்படைக்குமாறு சுந்தரசாமி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுந்தரசாமி கோவை நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏபி முருகானந்தம் மற்றும் அவரின் தந்தை பழனிச்சாமி ஆகியோர் பல வாய்தாக்களில் ஆஜராகவில்லை.

கோவை நீதிமன்றம்

இந்த நிலையில், வருகிற நவம்பர் 27ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஏ.பி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை பழனிச்சாமியை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி ரகுமான் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளார்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb