நவராத்திரி மூன்றாம் நாள் திருவிழா; முத்தங்கி சேவை அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன்!

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழாவின் மூன்றாம் நாளில், மீனாட்சியம்மன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

மீனாட்சியம்மன்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கி வருகின்ற 12-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வரும் நிலையில், மூன்றாம் நாளான நேற்று கோயில் வளாகத்திலுள்ள சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் முத்தங்கி சேவை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நவராத்திரியை முன்னிட்டு கோயிலின் நான்கு கோபுரங்களிலும் ஆடி வீதியிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. .

நவராத்திரி உற்சவ விழாவையொட்டி சிவபெருமான் திருவிளையாடல்களை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்ட கொலு மண்டபத்தில் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன.

மீனாட்சியம்மன் கோயில்

கொலுமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்துச் சென்றனர். முத்தங்கி சேவை அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர்.