கைவினை கலை விழா: மரபு வழி பெருமையைப் போற்றி பாதுகாப்பதற்காக ஏற்பாடு செய்த ஆரெம்கேவி சில்க்ஸ்!

இந்தியக் கைத்தறி பட்டுத் தொழிலில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஆரெம்கேவி சில்க்ஸ், திருநெல்வேலியில் உள்ள அதன் முதன்மை கிளையில் கைத்தறி தின நிகழ்வுடன், தன் 100வது ஆண்டு விழா நடந்து முடிந்திருக்கிறது.

இந்தியாவின் சிறப்புமிக்க கைத்தறி பாரம்பரியத்தைப் போற்றும் விதமாய் நேர்த்தியான கைவினைத்திறன், புதுமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பெருமைகளோடு நூற்றாண்டைக் கொண்டாடுகிறது. திருநெல்வேலி, வண்ணார்பேட்டை ஆரெம்கேவி சில்க்ஸ் கடையில் தேசிய கைத்தறி தினமான ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

கைவினை கலை விழா

மாரு மேகவால் சமூகத்தின் சிறப்பான சூஃப் மற்றும் காரிக் எம்பிராய்டரி, கட்ச்சில் இருந்து பாரம்பரிய பேட்ஜ் மற்றும் அப்ளிக் எம்பிராய்டரி ராஜஸ்தானின் பழங்கால பாட் ஓவியம் ஆகியவற்றோடு தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினை பொருட்களும், நாகாலாந்தின் பேக்ஸ்டராப் நெசவு, அஸ்ஸாமில் உள்ள மஜூலியில் இருந்து பாரம்பரிய முகக்கவசம் தயாரிப்பு, மற்றும் பட்டு நெசவு, மேற்கு வங்காளத்தின் காந்தா எம்பிராய்டரி, ஒடிசாவில் இருந்து இக்கத் உத்தர கன்னட மாவட்டத்தில் இருந்து ஹசே சித்தாரா மற்றும் திருநெல்வேலியில் இருந்து பத்தமடை பாய் ஆகிய கலைப்படைப்புகளோடு, பங்கேற்பாளர்களாக கைத்தறி மற்றும் கைவினைக்கலைஞர்களும் கலந்துகொண்ட பெருவிழாவில் இந்தியாவின் காஷ்மீரி கைவினைஞர்களின் நேர்த்தியான கைவினைத்திறனையும், அழகான காஷ்மீரி சால்வைகள் மற்றும் ஆர் எம்பிராய்டரி ஆடை வகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்தியாவின் புகழ் பெற்ற வளமான கலாச்சார மற்றும் பாரம்பரிய கலை நுட்பங்களைப் போற்றும் விதமாய் தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. ஸ்ரீ ஆரெம்கே.விஸ்வநாத பிள்ளை அவர்களால் 1924-ல் துவங்கப்பட்ட ஆரெம்கேவி சில்க்ஸ் தரமான திருமண பட்டுகள், தனித்துவமான பட்டுப்புடவைகள் மற்றும் குடும்ப ஆடைகள், பாரம்பரிய நெசவு நுட்பங்களைக் கண்டறிந்து ஆதரவு அளித்தல் புதுமையான வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் கைவினைஞர்களுடன் இணைந்து காப்புரிமை பெற்ற கைத்தறி நுட்பங்களை உருவாக்கி இந்தியக் கைத்தறி பாரம்பரியத்தின் கலைத்திறனைக் கொண்டாடும் சிறப்புமிக்க பணியைச் செய்து வருகிறது.

கைவினை கலை விழா

ஆரெம்கேவி சில்க்ஸ் தனது அடுத்த நூற்றாண்டைத் துவங்கும் இந்த மகிழ்வான தருணத்தில் பாரம்பரிய கைவினைத்திறனை ஊக்குவிப்பதிலும், நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களை ஆதரிப்பதிலும் உறுதியுடன் உள்ளது. 100வது ஆண்டு விழா மற்றும் கைத்தறி தின விழா தரம் நம்பகத்தன்மை ஆகியவற்றில் ஆரெம்கேவி சில்க்ஸின் நீண்டகால அர்ப்பணிப்பிற்குச் சான்றாக விளங்குகிறது. மற்றும் இந்தியக் கைத்தறியின் உன்னதமிக்க மரபு வழி பெருமையைப் போற்றி பாதுகாக்கும் வகையில் நடைபெற்றது.