“பழங்குடிப் பெண்கள் தாலி அணியத் தேவையில்லை..!” – ஆசிரியை பேச்சும் சஸ்பெண்ட் நடவடிக்கையும்

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவை சேர்ந்தவர், ஆதிவாசி பரிவார் சன்ஸ்தாவின் நிறுவனர் ஆசிரியை மேனகா தாமோர். இவர் தற்போது சாதா பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா

இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஆசிரியை மேனகா தாமோர், “பழங்குடியின பெண்கள் பண்டிதர்கள் சொல்வதைப் பின்பற்ற வேண்டாம். பழங்குடியின மக்கள் வழக்கப்படி குங்குமமும், தாலியும் அணியத் தேவை இல்லை. நாம் இந்துக்களே கிடையாது. எனவே இனி விரதங்களைக் கடைப்பிடிப்பதை நிறுத்துங்கள். பழங்குடி மக்கள் குறிப்பாகப் பழங்குடியினப் பெண்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். அதுதான் முக்கியம்” என உரையாற்றினார்.

ஆசிரியையின் பேச்சுக்கு சில அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ராஜஸ்தான் அரசின் நடத்தை விதிகளை மீறியதற்காகவும், கல்வித் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதற்காகவும் ஆசிரியை மீது சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88