ஈரோடு: கடத்தி வரப்பட்ட குட்காவை பதுக்க உதவிய போலீஸார்… இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட எஸ்.பி!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் கடந்த 12-ம் தேதி வாகனச் சோதனையில் பவானி போலீஸாரான பிரபு மற்றும் சிவகுமார் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 27 மூட்டைகளில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 295 கிலோ அளவில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

சஸ்பெண்ட்

இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் பிரபு, சிவகுமார் இருவரும் பிடிபட்ட வேனை, சேலம் மாவட்டம் வெப்படைக்கு கொண்டு சென்று, அங்குள்ள ஒரு வீட்டில் குட்காவை பதுக்கினர். தொடர்ந்து, வேன் ஓட்டுநரான தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மூலம் வேன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததுடன், குட்காவை விடுவிக்க லஞ்சம் கேட்டுள்ளதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, வேன் உரிமையாளர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு தகவல் தெரிவித்தார். ஜவகர் உத்தரவின்பேரில், பவானி போலீஸார், சம்மந்தப்பட்ட பிரபு, சிவகுமாரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் குட்காவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வெப்படை பகுதிக்குச் சென்ற போலீஸார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 295 கிலோ குட்காவை கைப்பற்றினர். இந்த நிலையில் போக்குவரத்து போலீஸாரான பிரபு, சிவகுமார் இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து ஈரோடு காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88