விகடன் செய்தி எதிரொலி: சென்னையில் பாதுகாப்பு தடுப்புடன் கட்டடம் இடிக்கும் பணி!

சென்னை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலைப் பகுதியில் சேதமடைந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நேற்று தொடங்கி நடைபெற்றது. கட்டடத்தை இடிக்கும் பணியானது, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் எந்தவித பாதுகாப்பும் இன்றி நடைபெற்று வந்தது. கட்டடங்கள் இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மக்கள் அந்தப் பாதையைக் கடந்து செல்கின்றனர். அந்த இடத்தில் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கான அறிவிப்புப் பலகை கூட வைக்கப்படவில்லை.

சென்ற வருடம், இதே பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போதுதான் எதிர்பாராத விதமாக, சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள்மீது சுவர் விழுந்து, விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். எனினும் பாதுகாப்புக்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இது குறித்து விகடன் இணையதளத்தில் ஸ்பாட் விசிட் செய்து செய்தியாக பதிவிட்டிருந்தோம்.

மீண்டும் அதே அலட்சியப் போக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை சுட்டி காட்டி விகடனில் செய்தி வெளியீட்டதை அடுத்து,  இன்று கட்டடடங்களை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்தை சுற்றி அந்த பாதையில் செல்லும் மக்களின் பாதுகாப்பிற்காக தரக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாநகர அதிகாரிகளிடம் பேசிய போது, “செய்தி மூலம் தகவல் தெரிய வந்ததும், பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டது. இங்கு மட்டுமின்று எங்கு கட்டடம் இடிக்கும் பணிகள் நடந்தாலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88