Tamil News Live Today: `ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்’ – புதிய சபாநாயகர் இன்று தேர்வு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது

கள்ளக்குறிச்சி சாராய மரணம்…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏசுதாஸ் (35) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்திருக்கிறது.

`ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்’

18-வது மக்களவையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கும் பொருட்டு இடைக்கால சபாநாயகராக பாஜகவின் பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டார். அவர் கடந்த இரண்டு நாள்களாக எம்.பி-க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்தநிலையில் இன்று 18-வது மக்களவையின் சபாநாயகர் தேர்வு செய்யப்படவுள்ளார். கடந்த காலங்களில் சபாநாயகர் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்தரப்பினர் என அனைவரும் ஒருமித்த கருத்து அடிப்படையில் சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். இந்த முறையும் பாஜக தரப்பில் ஒருமித்த கருத்துக்காக காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது, நாடாளுமன்ற மரபு படி, துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்றம்

எனினும் பாஜக அதனை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2 ஆவது முறையாக சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லா மனுத்தாக்கல் செய்தார். அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88