கள்ளக்குறிச்சி துயரம்: `முதல்வர் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்!’ – எல்.‌முருகன் காட்டம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு ஆ.‌ ராசாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் எல். முருகன். அதேவேளையில், மத்தியப்பிரதேச ராஜ்யசபா உறுப்பினராக எல். முருகன் தேர்வாகியிருந்த நிலையில், இரண்டாவது முறையாக மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நீலகிரியில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், தனக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

எல். முருகன்

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் நேற்று மாலை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், “தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக இன்றைக்கு கள்ளக்குறிச்சியில் 50 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை பலி கொடுத்திருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மிகப்பெரிய பேரிடர். முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். தி.மு.க வைச் சேர்ந்தவர்கள் இதன் பிண்ணனியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சர் முழு பொறுப்பையும் ஏற்று, உடனடியாக பதவி விலக வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும். கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் .

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88