நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்துவருகிறது. இதற்காக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு இடங்களில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, இந்தியாவின் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் ஊடுருவல் காரர்கள், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்கள், இந்துக்களின் சொத்துகளை காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு கொடுக்க விரும்புகிறது. பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது போன்ற பல்வேறு சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

ராகுல் காந்தி – மோடி

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய ராகுல் காந்தி,“வறுமை, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற முக்கிய பிரச்னைகளை புறக்கணிக்க, பிரதமர் மோடி பல்வேறு வழிகளில், பல்வேறு சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து, மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். சில சமயங்களில் அவர் உங்களை கைகளையும், உங்கள் தட்டுகளையும் தட்டச்சொல்வார்.

மொபைல் போன்களின் டார்ச் லைட் அடிக்கச் சொல்வார். தேர்தல் தொடங்கியதிலிருந்து மோடி தனது உரையின் போது மிகவும் பதட்டமாக இருக்கிறார். இன்னும் சில நாட்களில் அவர் மேடையில் கண்ணீர் விட்டு அழக்கூடும். மோடி உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார். மிகவும் கவனமாக இருங்கள். சில சமயங்களில் அவர் சீனா, பாகிஸ்தானைப் பற்றிகூட பேசுவார்.” எனக் குறிப்பிட்டார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.