கெஜ்ரிவால் கைது; மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது!
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அவருடைய வீட்டில் வைத்து கைதுசெய்தனர். கெஜ்ரிவாலின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லி அமைச்சர் அதிஷி, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை இன்றிரவே நாடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கெஜ்ரிவால் கைது தொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை… கைதாக வாய்ப்பா?
அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு, வாரன்ட்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளதால், அவர் கைதாகலாம் எனக் கூறப்படுகிறது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்த நிலையில், 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் அண்ணாமலை; தென் சென்னையில் தமிழிசை போட்டி – வெளியானது பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் இன்று அதிகாலை ஆறு மணி முதல் திடீர் சோதனை செய்து வருகின்றனர். விஜயபாஸ்கரின் இலுப்பூரில் உள்ள இல்லத்துக்கு 3 இனோவா காரில் வந்த 10 – க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
பொன்முடி அமைச்சர் பதவி விவகாரம்: இன்று விசாரணை
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முதல்வர் பரிந்துரைத்தும் மறுப்பு தெரிவிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
அம்மனுவில், “அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த ஆளுநர் ரவி முயற்சி செய்கிறார். அரசியல் சாசனத்தில் 164 (1) பிரிவை ஆளுநர் ரவி அப்பட்டமாக மீறுகிறார்.
முதல்வர் பரிந்துரைந்த பின்பும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுத்து வருகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பொன்முடிக்கு எம்எல்ஏ பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அமைச்சரவை பதவி வழங்க அரசு பரிந்துரைத்தும் ஆளுநர் அதை செயல்படுத்த மறுக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளது.