நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பு, உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தொடங்கியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் மார்ச் 20-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் வேட்பாளர் அறிவிப்பு, சுற்றுப்பயணம், பிரசாரம் ஆகியவற்றை இறுதி செய்து அறிவிக்கும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

முத்துச்செல்வி

தனித் தொகுதியான தென்காசி மக்களவை தொகுதியில் இரண்டாவது முறையாக தி.மு.க. நேரடியாக களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.

அதன்படி, சிட்டிங் எம்.பி. தனுஷ் குமார் மற்றும் சங்கரன்கோவில் தனித் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி ஆகியோரின் பெயர்கள் இறுதிக்கட்ட நிலையில் வேட்பாளர் பரிசீலனையில் உள்ளன. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்விக்கு எம்.பி. சீட் கொடுக்கப்படலாம் எனும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜான்பாண்டியன்

அதேபோல, பா.ஜ.க. சார்பில் தொழிலதிபர் ஆனந்தன் அய்யாச்சாமி அல்லது கூட்டணிக் கட்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான்பாண்டியன் களமிறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அச்சாரமாக, ராஜபாளையம் பகுதியில் தேர்தல் அலுவலகம் அமைப்பது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆய்வு நடத்திச்சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்தன்

இந்தநிலையில் அ.தி.மு.க., புதிய தமிழகம் கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி‌ தொகுதியில் போட்டியிட முடிவாகியிருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணசாமி

பெரும்பாலும் கட்சிகள் இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து முழுவீச்சில் களத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.