இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே ஓய்வுபெற, மார்ச் 9-ம் தேதி மற்றொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதையடுத்து, காலியாக இருக்கும் தேர்தல் ஆணையர்கள் இடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு பா.ஜ.க கொண்டுவந்த சட்டத்தின்படி குழு அமைக்கப்பட்டது.

சுக்பீர் சிங் சந்து, ஞானேஷ் குமார்

அதன்படி, பிரதமர் மோடி தலைமையில், மோடி, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால், மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் ஆகியோர் அடங்கிய குழு நேற்று கூடியது. இறுதியில், ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பஞ்சாப்பைச் சேர்ந்த சுக்பீர் சிங் சந்து, கேரளாவைச் சேர்ந்த ஞானேஷ் குமார் ஆகியோர் புதிய தேர்தல் ஆணையராக பரிந்துரை செய்யப்பட்டனர். அவர்களை, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நேற்று மாலை பணி நியமனம் செய்தார்.

ஞானேஷ் குமார்:

1988-ம் ஆண்டு பேட்ச் கேரள கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி.

2007 முதல் 2012 வரை யு.பி.ஏ அரசாங்கத்தின் போது பாதுகாப்பு அமைச்சகத்தில் இணை செயலாளர்.

2019-ல் ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370 நீக்கப்பட்டபோது உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர்.

ஞானேஷ் குமார்

கூட்டுறவு அமைச்சகத்தில் ஞானேஷ் குமார் பணியாற்றிய காலத்தில், கூட்டுறவு சங்கங்கள் (MSCS) (திருத்தம்) 2023 சட்டம் இயற்றப்பட்டது. மேலும், பாரதிய பீஜ் சககாரி சமிதி லிமிடெட் (BBSSL), தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் (NCOL). ), மற்றும் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (NCEL) மூன்று புதிய தேசிய கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி அன்று கூட்டுறவு செயலாளராப் பதவியேற்றார்.

தற்போது புதிய தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுக்பீர் சிங் சந்து:

1988-ம் ஆண்டு பேட்ச் உத்தரகாண்ட் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி

எம்.பி.பி.எஸ் படிப்பில் இளங்கலை பட்டமும், வரலாற்றுப் படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.

லூதியானாவிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷன் ஆணையராகச் சிறப்பாகப் பணியாற்றியதற்காக ஜனாதிபதி பதக்கம் பெற்றிருக்கிறார்.

சுக்பீர் சிங் சந்து

உத்தரகாண்ட முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்ற பிறகு, 2021-ல் உத்தரகாண்ட் தலைமைச் செயலாளராக நியமனம்.

இதுதவிர, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) தலைவராகவும் இவர் பதவி வகித்திருக்கிறார்.

தற்போது புதிய தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். இன்று அல்லது நாளை மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகலாம் என கருதப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.