ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் இருவரின் திருமண கொண்டாட்டம்தான் இந்தியா முழுவதும் ட்ரெண்டான டாப்பிக்காக இருந்து வருகிறது.

இந்திய திரையுலக சூப்பர் ஸ்டார்கள், தொழிலதிபர்கள், உச்ச நட்சத்திரங்கள் பங்குபெற்ற இவ்விழா மார்ச் 1ம் தேதி முதல் இன்று (மார்ச் 3ம் தேதி) வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 2,000-க்கும் அதிகமான வி.ஐ.பி விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். இந்த மூன்று நாள் கொண்டாட்டத்திற்கு பல கோடி ரூபாய் செலவில் உலகின் பிரபல இசைக் கலைஞர்கள், பாடகர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ரிஹானா

அதில் ரிஹானாவும் ஒருவர். 2020ம் ஆண்டு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப்-இசைப் பாடகியான இவர் கடந்த மார்ச் 1ம் தேதி இத்திருமணக் கொண்டாட்டத்தின் முதல் நாள் நிகழ்ச்சியான ‘An Evening in Everland’ என்ற பார்ட்டியில் பாடினார். தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் பெரிதாக ஆர்வமில்லாத இவரை பல கோடி செலவு செய்து புக் செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க திருப்பிய அவர், “இந்தியாவில் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தேன். இருப்பினும், என் வாழ்வில் சிறந்த நேரமாக அது அமைந்தது. என் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அமெரிக்கச் செல்ல வேண்டிய கட்டாயம். நிச்சையம் மீண்டும் திரும்புவேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.