‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அந்த நிகழ்ச்சியின் நடுவர்களான செஃப் வெங்கடேஷ் பட்டும், செஃப் தாமுவும் அறிவித்திருந்தார்கள்.

குக்கு வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் வர இருப்பதாகவும் இவர்களே நடுவர்கள் என்பது போலவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் அவருடைய முகநூல் பக்கத்தில் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவது குறித்து அறிவித்திருந்தார்.

செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட்

அதனைத் தொடர்ந்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். அதன் பின்னர் செஃப் தாமுவும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாகவும் விரைவிலேயே வேறொரு நிகழ்ச்சியில் சந்திப்பதாகவும் அறிவித்திருந்தார்’. இருவர் காம்போவும் உடையவில்லை அவர்கள் வேற நிகழ்ச்சியின் வழியாக என்டர்டெயின் செய்வார்கள் என அவருடைய ரசிகர்களும் கமென்ட் செய்து கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் செஃப் தாமு விலகல் குறித்து பகிர்ந்திருந்த வீடியோவை நீக்கியிருக்கிறார். அது குறித்து செஃப் வெங்கடேஷ் பட் அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், ‘பூனை கண் மூடிற்றால் உலகம் இருண்டு விடுமோ…

இணையத்தில் பதிவை நீக்கினால் உறைத்தது மறையுமோ…இதனால் உனக்கு கிடைப்பது எதுவாயினும்… மகிழ்ச்சி என்றும் எனக்கே.. சொல் தவறினாலும் நட்பு மாறாது…’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பதிவு சமூகவலைதள பக்கங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.