மும்பை விமான நிலையத்துக்குள் நேற்று மர்ம நபர் ஒருவர் டிக்கெட் இல்லாமல் நுழைந்துவிட்டார். விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட தயாராக நின்றது. பயணிகள் தற்காலிக படிக்கட்டுகள் வழியாக விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தனர். அந்நேரம் ஒருவர் விமானத்திற்குள் ஏற முயன்றார். அவரிடம் அதிகாரிகள் டிக்கெட் கேட்டனர். ஆனால் அவரிடம் டிக்கெட் எதுவும் இல்லை. அதோடு விமானத்தில் பயணம் செய்ய தேவையான எந்த வித ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அந்த நபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் மொகமத் ஆலம் என்று தெரிய வந்தது. அவரை அதிகாரிகள் சகார் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவர் என்ன காரணத்திற்காக விமான நிலையத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தீவிரவாத தடுப்பு படையினரும் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் சற்று மனநிலை தடுமாற்றத்தில் இருந்தார் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். மும்பை விமான நிலையத்தில் மெயின் நுழைவு வாயிலில் இருந்து விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கு செல்ல 6 செக்யூரிட்டி தடுப்புகளை தாண்டி செல்லவேண்டும். அப்படி இருக்கும் போது மொகமத் எப்படி இந்த பாதுகாப்புகளை தாண்டி உள்ளே நுழைந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்படுகிறது.
விமான நிலையத்தில் பிடிபட்ட நபர் பீகாரை சேர்ந்தவர் என்றும், அவர் மும்பை கார்கர் பகுதியில் வசிக்கிறார் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. மும்பை முழுக்க சுற்றிக்கொண்டிருந்தார் என்றும், அப்படியே விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இரவு 11.42 மணிக்கு கேட் நம்பர் 7 மூலம் விமான நிலையத்திற்குள் சென்ற மொகமத் அதிகாலை 1.51 மணிக்கு விமானத்திற்குள் ஏற முயன்றதாக பிடிபட்டார் என்பது தெரிய வந்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY