ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சி `சொல்வதெல்லாம் உண்மை’. இந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களுடைய பிரச்னைகளை பகிர்வார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளை அந்த நிகழ்ச்சி குழுவினர் செய்து கொடுப்பார்கள்.

அவர்கள் பேசும் அத்தனையும் ஒளிபரப்பாகும் என்பது தெரிந்தும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டிஆர்பி வரிசையிலும் இந்த நிகழ்ச்சி முன்னிலையில் இருந்ததால் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை வழிநடத்துபவராக நிர்மலா பெரியசாமி, லட்சுமி ராமகிருஷ்ணன், சுதா சந்திரன் ஆகியோர் இருந்தனர். 

நடிகை குயிலி

தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் `வாழ்ந்து காட்டுவோம்’ என்கிற நிகழ்ச்சி இதே சாயலில் வர இருக்கிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் பிரச்னைகளுக்கு தீர்வளிக்க அந்தந்த துறை சார்ந்த பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை நடிகை குயிலி வழிநடத்துகிறார். சில ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு குயிலி மீண்டும் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். `கல்யாணம் முதல் காதல் வரை’ தொடருக்குப் பிறகு பலரும் குயிலியை தொடரில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், வித்தியாசமாக சற்றும் எதிர்பாராத வகையில் நிகழ்ச்சியை வழிநடத்துபவராக என்ட்ரியாகி இருக்கிறார். 

சின்னத்திரை நடிகையாக பரிச்சயமானவர் ரித்திகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான `பாக்கியலட்சுமி’ தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இடையில் அந்தத் தொடரிலிருந்து விலகிய ரித்திகா எந்தத் தொடரிலும் இதுவரை நடிக்கவில்லை. ரித்திகாவிற்கும், வினு என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

ரித்திகா

இந்நிலையில் காதலர் தினத்தை தன் கணவருடன் தாஜ்மஹாலில் கொண்டாடி இருக்கிறார் ரித்திகா. அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துகளையும் கூறியிருக்கிறார். 

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அம்மன் தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமானவர்கள் பவித்ரா – அமல்ஜித் இருவரும். பவித்ரா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான `கண்ணே கலைமானே’ தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். அமல்ஜித் தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சிங்கப் பெண்ணே’ தொடரில் அன்பு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பவித்ரா – அமல்ஜித்

இருவரும் அம்மன் தொடரில் நடிக்கும்போதிலிருந்து காதலித்து வருகிறார்கள். அவர்கள் காதல் குறித்து வெளிப்படையாகவே இருவரும் அறிவித்திருந்தனர். சமீபத்தில் நமக்கு அளித்திருந்த பேட்டியில் பவித்ரா, `ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்து படிப்படியா அமல்ஜித் வளர்ந்திருக்கான். அவன் பட்ட கஷ்டத்தை பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன். இப்ப இந்தத் தொடரில் அவனுக்கு கிடைக்குற வரவேற்பை பார்க்குறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!’ எனக் கூறியிருந்தார். இருவரும் காதலர் தினத்திற்கு வாழ்த்துகள் கூறி பதிவிட்டிருக்கும் புகைப்படத்திற்கு ஆயிரம் ஹார்டீன்கள்! 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.