மத்திய அமைச்சராக இருப்பவர் நிரஞ்சன் ஜோதி. உத்தரப்பிரத்தை சேர்ந்த பெண் சாமியாரான நிரஞ்சன் ஜோதி, டெல்லியில் இருந்து லக்னோ வருவதாக இருந்தது. இது குறித்து தனது டிரைவருக்கு தகவல் கொடுத்து விமான நிலையத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டிருந்தார். உடனே அவரை அழைத்து வர டிரைவர் சத்ரம் மற்றும் பாதுகாவலர்கள் காரில் லக்னோ விமான நிலையம் சென்றனர். செல்லும் வழியில் அனைவரும் இறங்கி தேனீர் அருந்த முடிவு செய்தனர். இதற்கென லக்னோ அருகில் உள்ள பந்த்ரா என்ற இடத்தில் சாலையோரம் இருந்த ஒரு உணவகத்தில் வாகனத்தை நிறுத்தினர்.
அவர்கள் தேனீர் அருந்திக்கொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மத்திய அமைச்சரின் காரில் இருந்த பாதுகாவலரை கீழே தள்ளிவிட்டுவிட்டு உள்ளே சென்று காரை ஸ்டார்ட் செய்து எடுத்துச்செல்ல முயன்றார். காரும் சம்பவ இடத்தில் இருந்து நகர்ந்து விட்டது. அதற்குள் உணவகத்தில் தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து காரை மடக்கி பிடித்து நிறுத்தினர். அவர்கள் காரை கடத்த முயன்ற நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக அந்த நபர் காரை கடத்த முயன்ற போது அதில் மத்திய அமைச்சர் இல்லை. போலீஸார் காரை கடத்த முயன்ற நபரிடம் காரை கடத்த முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அமைச்சரை கடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் காரை கடத்தினாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.