நாமக்கல் மாவட்டம், மோகனூர் ராசி குமாரிபாளையம் தெருவை சேர்ந்தவர் அகல்யா. எம்.பி.ஏ பட்டதாரி. இவருக்கும் நாமக்கல் டவுன் ஏ.எஸ்.பேட்டை முல்லை நகரை சேர்ந்த ராஜா என்பவருக்கும் 2021 பிப்ரவரி 24 -ல் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பின் ராஜாவும், அகல்யாவும் நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் வசித்து வந்தனர். ஆனால் திருமணத்திற்கு பின் அவர்கள் இருவரையும் ராஜா-வின் தாயார் சாந்தி, சித்தி தமிழ்ச்செல்வி, மாமா கந்தசாமி ஆகியோர் சேரவிடாமல் தடுத்து வந்துள்ளனர். திருமணத்துக்கு முன் ராஜா ஐஏஎஸ் பணியில் இருப்பதாகவும், இதற்கு முன் பாரத் ஸ்டேட் வங்கி ஹைதராபாத் மண்டலத்தில் மண்டல மேனேஜர், சென்னை ராஜ்பவனின் மத்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட பணிகளில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான அடையாள அட்டைகளை அகல்யாவின் பெற்றோரிடம் காண்பித்து அவர்களை நம்ப வைத்து நம்பிக்கை மோசடி செய்துள்ளார்.
அதற்கு ராஜாவின் தாயார், சித்தி, மாமா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்லாமல் ராஜா வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அகல்யா, ராஜாவின் மொபைல் போனை எடுத்து சோதனை செய்துள்ளார். அப்போது அவர் ஐஏஎஸ் அதிகாரி இல்லை என்பதும், எந்த வங்கிகளிலும் பணிபுரியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதுடன் அகல்யாவை அடித்து துன்புறுத்து உள்ளனர். உயிருக்கு பயந்து அகல்யா மோகனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தொடர்ந்து இது தொடர்பாக மோகனூர் காவல்துறையில் கடந்த எட்டாம் தேதி புகார் அளித்தனர். அதன்படி போலி ஆவணம் தயாரித்தல், நம்பிக்கை மோசடி செய்தல், ஏமாற்றுதல், அடித்து துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் தலைமறைவான ராஜா உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.