தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ராட்சத மின் மோட்டார்கள் மூலம் வெள்ளநீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வந்தாலும், சில இடங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த்தார்.
அப்போது பேசிய அவர், “கடந்த 2 நாள்களாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லையை விட தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக கூடுதல் கவனம் செலுத்தி மீட்பு பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். செய்யவில்லை என்று கூறவில்லை. ஆனால், போதுமான வேகம் கிடையாது. வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். ஆனால், முதல்வர் இங்கேயே இரண்டு நாள்கள் தங்கி அவர் தலைமையில் மீட்பு பணிகள் நிவாரண பணிகள் மேற்கொண்டு இருக்க வேண்டும்.
அப்படி செய்திருந்தால் நிச்சயமாக அனைத்து கிராமங்கள், அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகள் சென்றடைந்திருக்கும். சில அமைச்சர்கள் இங்கு முகாமிட்டிருந்தாலும் பணிகளில் போதுமான வேகம் இல்லை. தூத்துக்குடி மாநகரத்தில் பல பகுதிகளில் மழை நீர் இன்னும் வடியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ஒரு குடும்ப அட்டைக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அறிவித்திருக்கிறார்கள். அது நிச்சயமாக போதுமானது இல்லை.
10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 17 ஆயிரம் ரூபாய் அறிவித்திருக்கிறார்கள் அதுவும் போதுமானது கிடையாது. வாழை, நெல் பாதிப்பில் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக கொடுக்க வேண்டும். இனிவரும் இதைவிட பெரும் புயல், சூறாவளிகூட வரலாம். அதை எதிர் கொள்ளவும் நம்மை பாதுகாத்துக் கொள்ளவு நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.