சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!

தீபாவளி கொண்டாட்டம்

சென்னையில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் நேற்று காலை முதல் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்கள், இன்று காலை வரை 100 டன் அளவுக்கு பட்டாசு கழிவுகளை அகற்றி உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணியானது தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கிறார்கள்.

மேலும் சென்னையில் மட்டும் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.