பீகாரில் வேலை கிடைத்த பிறகு, குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது மனைவியை கஜேந்திர குமார் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். புதிதாக பணியில் சேர்ந்த பெண் காவலர் ஷோபா குமாரி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு சோபா குமாரி, கஜேந்திரகுமார் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 23 வயது ஆன ஷோபாவுக்கு நீண்ட நாள்களாக வேலை இல்லாமல், தற்போது காவல்துறையில் வேலை கிடைத்துள்ளது. அவ்வாறு வேலை கிடைத்த பிறகு குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் கஜேந்திர குமார். பிறகு, கஜேந்திரகுமார் தனது மனைவி காவல் துறை பணிக்கே அதிக நேரம் செலவழிப்பதாகவும் இதனால் அந்த பணியில்லிருந்து விலக வேண்டும் என்றும் அவர் விரும்பி இருக்கிறார். ஆனால், ஷோபா விலகாத காரணத்தினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தனது தந்தைக்கு மருந்து வாங்கி வர டெல்லி சென்று வீடு திரும்பிய பிறகு ஷோபாவை பாட்னா ஜங்ஷன் அருகே உள்ள ஹோட்டலுக்கு கஜேந்திர குமார் அழைத்துள்ளார். பிறகு , ஹோட்டல் அறையில் கஜேந்திர குமார் துப்பாக்கியால் தனது மனைவியான ஷோபாவை கொடூரமான முறையில் கொலை செய்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். ஹோட்டலில் மனைவி கொலை செய்யப்பட்ட பின்னர் சுமார் 36 மணி நேரம் கழித்து போலீஸாரிடம் சிக்கினார் கணவர் கஜேந்திர குமார்.
குற்றம் சாட்டப்பட்ட கணவர் தனது மனைவி வேலை கிடைத்த பிறகு குடும்பத்திற்கு நேரம் கொடுக்காததால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது மனைவியை கொலை செய்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.