டெல்லியில் ராஜேஷ் என்பவர் 2004-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். முன்னாள் கடற்படை ஊழியரான பாலேஷ் குமாரின் மனைவி, ராஜேஷ் என்பவருடன் திருமணம் மீறிய உறவிலிருந்ததாக கூறப்படுகிறது. அதனால், பாலேஷ் குமார், அவரது சகோதரர் சுந்தர்லால் இருவரும் ராஜேஷை சந்தித்திருக்கிறார்கள். அப்போது மூவரும் மது அருந்தியபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் பாலேஷ் குமார், சுந்தர்லால் இருவரும் சேர்ந்து ராஜேஷை கொலை செய்துவிட்டனர்.

தீ விபத்து

இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து பாலேஷ் குமார் தப்பிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார். எனவே, அதற்காகப் பீகாரைச் சேர்ந்த மனோஜ் மற்றும் முகேஷ் ஆகிய இரு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினார். பின்னர் பாலேஷ் குமாரின் சகோதரருக்குச் சொந்தமான லாரியில் மூவரும் ராஜஸ்தானுக்குப் புறப்பட்டனர். ஜோத்பூரில், ஒரு இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு பாலேஷ் குமார் லாரிக்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது, உள்ளே இருந்த தொழிலாளர்களுடன் தனது ஆவணங்களை விட்டுவிட்டார்.

தீ விபத்து எனக் கருதி சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் லாரியில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், பாலேஷ் குமாரும், அடையாளம் தெரியாத ஒருவரும் இறந்துவிட்டதாகவும், சுந்தர்லால் மட்டுமே கொலைக் குற்றவாளிகளில் உயிருடன் இருப்பதால் அவரை மட்டும் கைது செய்து ராஜேஷ் கொலை வழக்கை முடித்து வைத்தது. மேலும், கடற்படை ஊழியரான பாலேஷ் குமார் உயிரிழந்ததால், அவரது மனைவிக்கு ஓய்வூதியம், ஆயுள் காப்பீட்டுத் தொகை, லாரிக்கான காப்பீட்டுத் தொகை ஆகியவையும் வழங்கப்பட்டது.

காவல்துறை

இந்த நிலையில்தான் பாலேஷ் குமார் உயிருடன் இருப்பதாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை காவல்துறை மீண்டும் தூசிதட்டி எடுத்தது. இது தொடர்பான கைது நடவடிக்கைக்குப் பிறகு காவல்துறை, “டெல்லியின் பவானா பகுதியில் மூன்று கொலைகளைச் செய்த பாலேஷ் குமார் நஜஃப்கரில் வசிப்பதாகத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அவரை கைது செய்திருக்கிறோம்.

தனது பெயரை அமன் சிங் என மாற்றிக்கொண்டு ரியல் எஸ்டேட் வியாபாரியாக இருந்த அவருக்கு தற்போது 60 வயதாகிறது. ஹரியானாவைச் சேர்ந்த பாலேஷ் குமார் 8-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். 1981-ம் ஆண்டு கடற்படையில் சேர்ந்து 1996-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பிறகு சரக்கு வாகனம் தொழிலைத் தொடங்கி குடும்பத்துடன் டெல்லி உத்தம் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில்தான் ராஜேஷ் கொலையில் சம்பந்தப்பட்டார். அவரிடம் மேலதிக தகவலுக்கு விசாரித்து வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.