சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
இந்த நிலையில், மழையில் நனைவதைத் தவிர்க்க சைதாப்பேட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பொதுமக்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் எனப் பலர் மழைக்காக ஒதுங்கியிருந்திருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக, பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை சரிந்து விழுந்து, விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இதில், வாகன ஓட்டிகள் உட்பட 15 பேர் சிக்கி, காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர்.
அதில் ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்புப்படையினர், புல்டோசர் மூலம் மேற்கூரையை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.