தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் பொன் மாரியப்பன். இவர், கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி உதவி ஆய்வாளரிடம் பிணி அறிக்கை சமர்ப்பித்துவிட்டு பிணிக் கடவுச்சீட்டு பெற்று காவல் நிலையத்திலிருந்து சென்றார். ஆனால், அதே நாள் இரவில் தூத்துக்குடி, முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருன் சேர்ந்து தூத்துக்குடி பாத்திமாநகரைச் சேர்ந்த லூர்து ஜெயசீலனை கொலை செய்துள்ளார்.
உயிரிழந்த லூர்து ஜெயசீலன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் இருந்தது. கடந்த 1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி லூர்து ஜெயசீலன், அழகு என்பவரைக் கொலை செய்துள்ளார். இது சம்மந்தமாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட அழகு என்பவர் மத்தியபாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த பொன்மாரியப்பனின் தாய் மாமா ஆவார்.
தனது தாய்மாமா அழகுவை கொலை செய்த லூர்து ஜெயசீலனை 23 ஆண்டுகள் கழித்து பழிக்குப்பழியாக கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு தலைமைக் காவலர் பொன்மாரியப்பன், மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து லூர்து ஜெயசீலனை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து பொன் மாரியப்பன் மீது துறை ரீதியான விசாரணை நடந்து வந்தது. இதில், இவர் மீதான குற்றம் நிரூபணம் ஆனது.
இதையடுத்து ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த காவல்துறையின் கட்டுக் கோப்பை சீர்குலைத்து பொதுமக்களின் மத்தியில் காவல்துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் குற்றசெயல் புரிந்துள்ள பொன்மாரியப்பனை பணியில் இருந்து பணி நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். கொலை வழக்கில் கைதான தலைமைக் காவலர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY