அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜூன் 14-ல் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிராக, ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை, 3,000 பக்கங்கள்கொண்ட ஆவணங்களை டிரங்கு பெட்டியில் கொண்டுவந்து அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

செந்தில் பாலாஜி

அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து புழல் சிறையிலிருந்து அழைத்துவரப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார். அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 150 பக்க குற்றப்பத்திரிகையின் நகல் செந்தில் பாலாஜி தரப்பிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொளி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென்றும் சிறைத்துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.