மெட்ராஸ் என்கிற சென்னை மாநகருக்குப் பிறந்தநாள். அதுவும் 384-வது பிறந்தநாள். ‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ என்பதைத் தாண்டி, பலதரப்பட்ட கலாசாராங்கள் ஒன்றுகூடும் இடமாகவும் சென்னை இன்று மாறியிருக்கிறது. நகர நெரிசல், அதிகமான வாழ்வாதார செலவு, மழை வெள்ளம் என இங்கு நிறையவே பிரச்னைகள் இருந்தாலும், பலருக்கு வாழ்வளித்ததும், வாழ்வளித்துக் கொண்டிருப்பதும் இதே சென்னைதான்.
இங்கே வேலை பார்க்கும் பலரும் தங்களின் சொந்த ஊருக்குப் புறப்படும் போது இருக்கும் சந்தோஷம், திரும்ப வரும்போதும் இருக்கிறதென்றால் அது சென்னையின் மனிதர்களை மனதில் வைத்துத்தான்!
தினமும் உங்களின் ஆன்மாவோடு உரையாடும் இந்த சென்னை மாநகரை நீங்கள் எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறீர்கள்?
ஒரு சுலபமான குவிஸ் மூலம் தெரிந்துகொள்ளலாமா? கேள்விகளுக்குப் பதிலளிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
விகடனின் மெட்ராஸ் தினச் சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.