பத்திரப்பதிவுத் துறையில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய உரிமையாளர்கள் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றினை பெறுவார்கள்.

பத்திரப்பதிவு துறை

அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் அளவு, சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். முன்பெல்லாம் இந்த வில்லங்க சான்றிதழை பெற பத்திரப்பதிவு துறைக்கு நேரில் செல்ல வேண்டும்.

இதன் மூலம் வில்லங்க சான்றிதழ் பெற எந்தவித லஞ்சமும், புரோக்கர்கள் உள்பட யாருக்கும் பணம் தர வேண்டிய அவசியமில்லை. இந்த வில்லங்க சான்றிதழ் விண்ணப்பித்ததில் இருந்து அடுத்த இரண்டு மூன்று நாள்களுக்குள் சான்றிதழ் கிடைத்துவிடும். கடந்த 2021-22-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தப்படி 1950-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 1974-ம் ஆண்டு வரையிலான காலத்துக்குட்பட்ட வில்லங்க சான்றுகளை கணினியில் பதிவேற்றம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

வில்லங்க சான்று

இதற்காக 36.58 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இப்பணி முடிந்ததும் 1950-ம் ஆண்டு முதல் இன்றைய நாள் வரையிலான வில்லங்க சான்றுகளை பொதுமக்கள் ஆன்லைனில் பார்வையிடவும் இலவசமாக பதிவிறக்கமும் செய்துக்கொள்ளலாம் என பத்திரப்பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.