விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் கைது!
விக்கிரவாண்டி பகுதியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க-வின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கனிமொழி எம்.பி குறித்தும் அவதூறாகப் பேசிய பா.ஜ.க தெற்கு மாவட்டத் தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் கைதுசெய்யப்பட்டார். விக்கிரவாண்டி போலீஸார் கலியவரதனைக் கைதுசெய்தனர். இந்த நிலையில், கலியவரதனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கி விக்கிரவாண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.