மெக்சிகோவின் வடகிழக்கு நகரமான மான்டேரியில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினா, ஒரு நாளில் பயனர்கள் படிக்கக்கூடிய ட்வீட்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு கொண்டுவந்திருப்பதால் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
கடந்த ஜூலை 3-ம் தேதி உலகின் மிக வெப்பமான நாளாகக் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். உலகின் சராசரி வெப்பநிலை 17.01 செல்சியஸாக பதிவாகியிருக்கிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய சீன அதிபா் ஷி ஜின்பிங், “அதிகார அரசியலுக்கு ஆதரவளிக்காமல் உறுப்பு நாடுகள் அனைத்தும் பிராந்திய அமைதியை உறுதிப்படுத்துவதற்காக ஒருங்கிணைய வேண்டும்” என்றாா்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரலின் அடுத்த வாரம் சீனா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், அவரின் பயணத்தைக் காரணம் குறிப்பிடாமல் சீனா ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியா தலைமையில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதிய நிரந்தர உறுப்பினராக ஈரான் சேர்ந்திருக்கிறது. காணொளி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தானைச் சேர்ந்த உலக தலைவர்கள் பங்கேற்றனர்.
கலிஃபோர்னியாவில், முதலை ஒன்று பெண்ணை கடுமையாகத் தாக்கி கொன்றிருக்கிறது. மேலும் உடல் அருகே யாரும் செல்ல முடியாதவாறு அதனை பாதுகாத்து வருகிறது.
வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து அங்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
புகழ்பெற்ற ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளரான எலெனா மிலாஷீனா (Elena Milashina), விமான நிலையத்திலிருந்து வரும் வழியில், அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.